districts

ஊதியக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.13- 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். 1.4.2003க்கு பின்பு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்சன் வழங்க வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையினை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி கழகங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சிஐடியு,  ஏஐடியூசி, டிடிஎஸ்எப், டி.என்.எஸ்.டி.சி தொழிற்சங்கங்கள், திருச்சி, கரூர் மண்டலம் சார்பில் வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல, திருச்சி புறநகர் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்டத் தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சம்மேளன துணைத் தலைவர் கருணாநிதி, சிஐடியு - எஸ்இடிசி மாநிலத் தலைவர் அருள்தாஸ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சிவானந்தம், ஏஐடியூசி பொதுச் செயலாளர் சுந்தர்ராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஏ.ஐ. டி.யூ.சி கார்த்திகேயன், ஏஐடியூசி சம்மேளன துணைச்செயலாளர் சுப்ரமணியன், எஸ்சிடிசி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ராமதாஸ் ஆகியோர் பேசினர். முடிவில் ஏஐடியூசி திருச்சி மண்டல தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.  கும்பகோணம் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பொதுச் செயலாளர் மணிமாறன், எஐடியுசி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், எஸ்சிடிசி சிஐடியு தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமை வகித்தனர். எஐடியூசி ஓய்வு சங்க பொதுச்செயலாளர் பி. அப்பாதுரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் தில்லைவனம் துவக்கி வைத்து பேசினார். இறுதியாக, சிஐடியு மூத்த தலைவர் ஆர் மனோகரன் பேசினார்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு சம்மேளன துணைத் தலைவர் எம். கண்ணன், துணைத் தலைவர் துரை. மதிவாணன், மத்திய சங்கத் தலைவர் சேகர், சிஐடியு துணைபொதுச் செயலாளர் வெங்கடேசன், ஜீவா ஆகியோர் பேசினர். புதுக்கோட்டை  புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல அலுலகம் முன்பாக சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மண்டல பொதுச் செயலாளர் இரா.மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி பணியாளர் சங்க சம்மேளனப் பொதுச் செயலாளர் இராஜசேகர், ஏஐடியுசி சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் கணேசன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் நாராயணன், வின்செனட் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா உரையாற்றினார். முத்துக்குமார் நன்றி கூறினார்.