கரூர், ஆக.17 - கரூர் மாவட்டத்தில் 594 தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ.89 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ரூ.23.18 கோடி அரசு மானியமாக வழங்கப் பட்டுள்ளது. கரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் துவங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க ஆவண செய்யும் வகையில், புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS), படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உரு வாக்கும் திட்டம் (PMEGP) போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வரு கிறது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டு களில், 33 இளைஞர்களுக்கு ரூ.24.51 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ரூ.6.12 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் (UYEGP) திட்டத்தின்கீழ் மாவட்டத் தில் 122 படித்த இளைஞர்களுக்கு ரூ.5.69 கோடி மதிப்பிலான திட்டங் களுக்கு ரூ.1.42 கோடிஅரசு மானிய மாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் கரூரில் 773 தொழில் முனைவோர்களுக்கு ரூ.39. 84 கோடி மதிப்பிலான திட்டங் களுக்கு ரூ.16.08 கோடி அரசு மானிய மாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு திட்டங்களின்கீழ் கரூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு களில் மாவட்ட தொழில்மையத்தின் மூலம் 594 தொழில் முனைவோர் களுக்கு ரூ.89 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ரூ.23.18 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது” என்றார். இத்திட்டத்தின்கீழ் பயனடைந்த கே.எஸ்.அஸ்வின்குமார் கூறுகை யில், “நான் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன்.
நான் திரைமறைப்பு வலைகள் தயாரித்தல் தொழில் தொடங்க எண்ணியிருந் தேன். தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் துறையின்கீழ் செயல்படுத்தப் படும் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் பற்றி அறிந்தேன். இதனைத் தொடர்ந்து இணையதளம் வாயிலாக விண்ணப் பித்து மாவட்ட தொழில்மைய அலுவ லகம் மூலம் ரூ.47,08,000/- வங்கி கடன் பெற்று திட்ட மதிப்பீட்டில் 35% மானியமும் பெற்றேன். இத்தொழில் மூலம் மாதம் ரூ.20,00,000 வருவாய் ஈட்டுகிறேன். முதல்வருக்கு நன்றி” என்றார். புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) மூலம் பயன் பெற்ற க.ரதி கூறுகையில், “நான் இளங்கலை கூட்டுறவு மேலாண்மை படித்து உள்ளேன். நான் ஆயத்த ஆடை கள் தயாரிக்கும் தொழில் தொடங்க எண்ணியிருந்தேன். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட தொழில் மையத்தை அணுகி எனது ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழில் தொ டங்கும் திட்டம் பற்றி தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து மாவட்ட தொழில்மைய அலுவலகம் மூலம் ரூ.2,80,89,000/- வங்கி கடன் பெற்று திட்ட மதிப்பீட்டில் 25% மானிய மும் மற்றும் 3% வட்டி மானியமும் பெற்றேன். இத்தொழில் மூலம் மாதம் ரூ.16,66,000/-வருவாயும், ரூ.2,16,000/- லாபமும் ஈட்டுகிறேன். இத்திட்டம் என்னைப் போன்ற முதல் தலை முறை தொழில் முனையும் பெண் களுக்கு தொழில் தொடங்கும் கனவு நிறைவேற உதவியாக உள்ளது. எனவே முதல்வருக்கு நன்றி” என்றார்.
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கரூர் மாவட்டம்.