districts

img

சிபிஎம் மலைக்கோட்டை பகுதிச் செயலாளராக ஜி.கே.ராமர் தேர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதிக் குழு 9 ஆவது மாநாடு ஞாயி றன்று தாராநல்லூரில் நடந்தது. மாநாட்டிற்கு மணி கண்டன், செந்தில், சங்கீதா ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டுக் கொடியை  மூத்த தோழர் பாலகிருஷ் ணன் ஏற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பால பாரதி துவக்க உரையாற்றி னார்.  திருச்சி இ.பி ரோடு பீரங் கிகுளம் பகுதியில் செயல்ப டும் நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையத்தை தரம்  உயர்த்தி 24 மணி நேரமும்  பிரசவம் உள்ளிட்ட மருத்து வம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.பி  ரோடு பகுதிகளில் நகர்ப்புற  பேருந்துகளை இயக்க வேண்டும். மலைக் கோட்டை, தெப்பக்குளம், பெரிய கடைவீதி பகுதி களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பொது  கழிப்பறை, சுத்திகரிக்கப் பட்ட குடிநீர், தாய்மார் களுக்கு பாலூட்டும் அறை கள், பொருட்கள் பாதுகாப்பு பெட்டக வசதிகள் செய்து தர வேண்டும்.  பொது மக்க ளுக்கு இடையூறாக இ.பி. ரோடு மற்றும் பாபு ரோட் டில் உள்ள டாஸ்மாக் கடை களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மலைக்கோட்டை பகுதி செயலாளராக ஜி.கே.ராமர்  உள்பட 9 பேர் கொண்ட  பகுதிக் குழு தேர்வு செய்யப் பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் நிறைவுரையாற்றினார்.