districts

img

பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுக!

திருச்சிராப்பள்ளி, அக்.19 - மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் வள்ளி,  சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மருந்து விற்பனை பிரதிநிதி  சங்க மாநிலச் செயலாளர் செல்வராஜ் ஆகி யோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளரிடம் வெள்ளியன்று மனு கொடுத்தனர். அம்மனுவில், “தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல் படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவத்  திட்டத்தின் ஊழியர்களின் கோரிக்கை களான மாத ஊதியம் ரூ.10,000 வழங்க வேண்டும். தற்போது ஊழியர்களுக்கு வழங்கும் மாத ஊதியம் மிகவும் தாமத மாக வழங்குவதை கைவிட்டு பிரதி மாதம்  5 ஆம் தேதி வழங்க வேண்டும். ஸ்கோர்  சீட் மார்க் என்ற பெயரில் ஊதிய பிடித்தம்  செய்வதை கைவிட வேண்டும்.  திறன் வளர்ப்பு பயிற்சி கொடுத்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி கடந்த 30.7.2024 இல் சென்னை  டி.பி.எச் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர் டி.பி.எச் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போதும் மற்றும் 16.8. 2024 இல் என்.எச்.எம் இயக்குநர், மகளிர்  மேம்பாட்டு வாரியம் இணை இயக்குந ருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போதும் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் இன்று வரை அமலாக்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது அக்கோ ரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்து கிறோம். இதை அமலாக்கம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” கூறியிருந்தனர்.  மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளிடம் கொடுத்த போது  சிஐடியு தரைக்கடை சங்க மாவட்டச் செய லாளர் செல்வி, தையல் சங்க மாவட்டச் செயலாளர் பிரமிளா, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க நிர்வாகிகள் உட னிருந்தனர்.