திருச்சிராப்பள்ளி, மே 8 - திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு ஒன்றிய, மாநில அரசுப் பணிகளுக் கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தின் (TNUSRB) Sub-Inspector of Police (Taluk & AR) மற்றும் Grade-II PC (இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப் பாளர்) போன்ற பதவிகளுக்கான போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற்று வரு கின்றன. வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வு களுக்கு தயாராகும் அனைவரும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறும், பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வகுப்புகள் ஒளிபரப்பா கும் எனவும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனைப் பார்த்து பயனடையலாம். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகள், சமச்சீர் புத்தகங்களின் மென் நகல், முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் (https://tamil naducareerservices.tn.gov.in) உள்ளன. இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.