தஞ்சாவூர், ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த பூ மொத்த வியாபாரி யிடம், பூ அனுப்புவதாக பணம் வாங்கிக் கொண்டு புல்லை அனுப்பி நூதன மோசடி செய்தவர் மீது சைபர் கிரைமில் புகார் செய்யப் பட்டுள்ளது. பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் பூ மொத்த வியாபாரக் கடை நடத்தி வருபவர் வீரசேகரன் (48). திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக பல்வேறு ரக பூக்களை கொள்முதல் செய்து பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சில்லரை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது செல்போன் நம்பருக்கு ஓசூரில் இருந்து பேசுவதாக கூறிய நபர், பேராவூரணி யில் உள்ள பூக்கடை உரிமையாளர் ஒருவர் உங்களது செல் போன் நம்பர் கொடுத்ததாக கூறி, தான் ஓசூரில் பெரிய பூ கமிஷன் மண்டி வைத்திருப்பதாகவும் உங்களுக்கு தேவையான அனைத்து ரக பூக்களையும் விலை குறை வாக தருவதாகவும் கூறியுள்ளார். சில ரக பூக்களின் விலை என்ன என்று வீரசேகர் விசாரித்த போது, இவர் கொள்முதல் செய்துள்ள தஞ்சை, திருச்சி விலையைவிட பாதி விலை குறைவாக சொல்லி யுள்ளார். விலை குறைவாக இருந்ததால் சாமந்தி, செண்டிப்பூ, ரோஜா உள்ளிட்ட பூக்கள் தேவை என கூறிய வுடன், அடுத்த சில நிமிடங்களில் கணினியில் ரூ.18, 200-க்கு பில் போட்டு அனுப்பினார். பின்பு, மூட்டைகள் பார்சல் செய்யப்பட்டு லாரி சர்வீசில் போடப்பட்டுள்ளது எனவும், மூட்டைகளின் படம், லாரி சர்வீஸ் நம்பர் மற்றும் பார்சல் எண்ணிக்கை, பில் நம்பர் அனைத்தும் வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதாகவும், தஞ்சாவூ ருக்கு வந்து பார்சலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக 18,200 ரூபாயை ஜி-பே செய்யும்படி கூறி யுள்ளார். இவற்றை எல்லாம் உண்மை என நம்பிய வீரசேகர், உடனடியாக அவர் அனுப்பிய நம்பருக்கு ரூ.18,200-ஐ ஜி-பே செய்துள்ளார். தஞ்சாவூருக்கு வந்த பார்சலை அங்கிருந்து பேராவூரணி எடுத்து வந்து பிரித்து பார்த்த போது, அதில் பூக்களுக்கு பதிலாக அனைத்து பண்டல்களி லும் திருமண மண்டபங்களில் மணமேடை அலங்காரம் செய்ய பயன்படுத்தும் ஒருவகை புல் மட்டுமே இருந்து உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் கிரைமில் வீரசேகரன் புகார் செய்துள்ளார். நூதன முறையில் மோசடி செய்த இந்த சம்பவம் பூ வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.