தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மாலையணிவித்து, பூத் தூவி மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் மாவட்டத் தலைவர் சேகர், மாநிலச் செயற் குழு உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர் விவேக், வட்டாரத் தலைவர் வடக்கு ஜெயக் குமார், மாநில பொதுக் குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட விவசாய அணித் தலைவர் முருகராஜ், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலர் செந்தில் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.