districts

img

தரைப்பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம்!

சேலம், டிச.13- கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தால், போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை, கொல்லி மலை, கெங்கவல்லி உள்ளிட்டப் பகுதிகளில் பெய்த மழையால் 3  ஆண்டுகளுக்கு பிறகு சுவேத நதி யில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் கெங்கவல்லி பேரூராட்சி, 15 ஆவது வார்டுக்குட் பட்ட பகுதியில் உள்ள சுவேத நதி யின் குறுக்கே அப்பகுதி பொது மக்களின் பங்களிப்பில் சுமார் 5  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாக அமைக்கப்பட்ட தரைப்பாலத் தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வலசக்கல்பட்டி, மால்புள்ளி, நடு வூர், பச்சமலை, அக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் 3 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள் ளது. விவசாயிகளின் நலன்கருதி  சுவேத நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டுமென  தமிழக அரசுக்கு அப்பகுதி விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதனிடையே, சுவேத நதியில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை,  குளிப்பாட்டவோ, செல்பி எடுக் கவோ வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள் ளனர். நெற்பயிர்கள் சேதம் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம் பகுதியில், விவசாயி கள் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட  நிலத்தில் ஆந்திரா பொன்னி நெல் வகையினை பயிரிட்டுள்ளனர். ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், வியாழனன்று அதிகாலையிலிருந்து பலத்த காற் றுடன் பெய்த கனமழையால் 20  ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை  செலவு செய்த விவசாயிகள், பயிர் கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் கவலையடைந்துள்ளனர். எனவே,  சேதமடைந்த பயிர்களை வேளாண்  துறை அதிகாரிகள் நேரில் வந்து  ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர்.