மீனவர் குறைதீர் கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும்
மீன்பிடித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
தஞ்சாவூர், ஆக.5- மீன்பிடித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தஞ்சை மாவட்ட சிறப்பு மாநாடு தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கருத்தர் தலைமை வகித்தார். சிஐ டியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசி னார். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தென்னை விவசா யிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.எஸ்.வேலுச் சாமி, டாஸ்மாக் சங்கம் வீரை யன், மூத்த தோழர் வழக்க றிஞர் வீ.கருப்பையா, விவ சாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் பி. சேகர், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி. ஆர்.கே செந்தில்குமார் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் புதிய தலைவராக பி.பெரியண் ணன், செயலாளராக சகா புதீன், பொருளாளராக கருத் தர் மற்றும் துணைத் தலைவர் களாக குத்புதீன், நாகேந்தி ரன், சுப்பிரமணியன், நாகூர் பிச்சை, துணைச் செயலா ளர்களாக தயார் சுல்தான், அகிலன், ரஞ்சித் மற்றும் 10 பேர் கொண்ட நிர்வா கக் குழு தேர்வு செய்யப் பட்டது. புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், மாநாட்டை நிறைவு செய்தும், தமிழ் நாடு மீன்பிடித் தொழிலா ளர் சம்மேளனம் மாநிலச் செயலாளர் எஸ்.அந்தோணி பேசினார். மாவட்ட அளவிலான மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட ஆட்சி யர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் கூட்ட வேண்டும். தஞ்சை மாவட்ட கடற்கரை, மீன்பிடி துறைமுகங்கள், முகத்துவாரங்களை ஆண்டு தோறும் தூர்வாரி அடிப் படை வசதிகளை மேம் படுத்த வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமி ழக மீனவர்கள் பாதிக்கப்படு கின்றனர்; சிறைபிடிக்கப்படு கின்றனர்; படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே ஒன்றிய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும். நாட்டுப் படகுகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும். மீன்வளத்தை பாதுகாக்க கடல்வாழ் உயிரி னங்களை அழியாமல் பாது காத்திட வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கங்களில் தொழிலாளர்கள் அனை வரையும் பாரபட்சமின்றி உறுப்பினராக சேர்க்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலை அனைவருக் கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் ஜனநாயக பூர்வ மாக நடத்த வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவா ரணத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர், மீனவர் குடும் பங்களுக்கு ரூ.10 லட்சம் விபத்து நிவாரண நிதி வழங்க வேண்டும். மீன்பிடி தொழிலாளர் நலவாரியத் தில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பணப் பயன்களை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். மீன்பிடித் தொழி லாளர்களுக்கு ஓய்வூதி யத்தை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு இல்லாத மீனவர் களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மீன் பிடித் தொழிலாளர் இருபால ருக்கும் மானியத்துடன் தொழிற்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
சமுதாய வள பயிற்றுநர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
தஞ்சாவூர், ஆக.5 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், சமுதாய வள பயிற்றுனர்களுக்கான இயற்கை வேளாண்மை பயிற்சி, தென்னை ஆராய்ச்சி நிலையம் வேப்பங் குளத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் முனைவர் என்.முத்துக்குமரன் வரவேற்று, இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை பற்றி எடுத்து ரைத்தார். ஆராய்ச்சி நிலையத் தலைவர் முனைவர் இரா. அருண்குமார் தலைமை வகித்து, இயற்கை வேளாண்மை யில் மகளிரின் பங்கு குறித்து விளக்கிப் பேசினார். பேராவூரணி தோட்டக்கலை உதவி இயக்குநர் க.வள்ளியம்மாள், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வேளாண்மைக்கான திட்டங்களை பற்றி விரிவாக கூறி னார். முனைவர் எம்.விஜயபிரியா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிலைய முனைவர் எம்.சுருளி ராஜன் செய்திருந்தார். இந்தப் பயிற்சி திங்கள்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கருட சேவை
திருவில்லிபுத்தூர், ஆக.5- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப் பூரத் தேர் திருவிழா கடந்த 30ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆண்டாள் ரங்க மன்னார் காலை இரவு வேளைகளில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஐந்தாம் திருநாள் கருட சேவை காலை 10 மணிக்கு ஆடிப் பூரக் கொட்டகையில் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு 5 கருட சேவை நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழுவினர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.