தஞ்சாவூர், ஜூலை 29 - பெருமகளூர் பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்த எம்எல்ஏ, தீ விபத் தில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நிதி உதவி அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூர் பேரூராட்சியில் நடக்கும் வளர்ச்சிப் பணி களை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருமகளூர் பேரூராட்சி வலையன் வயல் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சி ராப்பள்ளி கோட்டம் மூலம், பிரதம மந்திரி யின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத் தின் கீழ், 168 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி ரூ.1596 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அத னைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடிழந்தவருக்கு உதவி அதனை தொடர்ந்து பெருமகளூர் சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் நீலா (65). இவரது கணவர் வடுகநாதன் ஏற்க னவே இறந்து விட்டார். மூதாட்டி நீலா, மனநலன் பாதிக்கப்பட்ட அவரது தங்கை யுடன் தனியாக கூரை வீட்டில் வசித்து வரு கிறார். இவரது குடிசை வீடு மின் கசிவு காரணமாக இரு தினங்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பாதிக்கப்பட்ட மூதாட்டி நீலாவை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினார்.