districts

img

கடமலையில் வேகமாக நிரம்பும் கண்மாய்கள்

தேனி, நவ.25- தேனி மாவட்டம் கட மலை-மயிலை ஒன்றியத் தில் மொத்தம் 543 ஏக்கர் பரப்பளவில் பஞ்சம்தாங்கி, சாந்தநேரி, பெரியகுளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவ சாயம் நடைபெற்று வரு கிறது. இதில் ஓட்டணை, பெரியகுளம், பஞ்சம்தாங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூலவைகை ஆற்றில் இருந் தும் பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி மற்றும் ஓடைகளில் இருந்தும் வரத்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதம் கட மலை-மயிலை ஒன்றிய கிரா மங்களிலும் மூல வைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளி  மலை வனப்பகுதியிலும் கன மழை பெய்தது. அதன் கார ணமாக வைகை ஆறு மற்றும்  மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. தவிர கிராமங்களில் உள்ள அனைத்து ஓடைகளி லும் நீர்வரத்து ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த  சில வாரங்களாக அனைத்து  கண்மாய்களும் வேகமாக நிரம்பி வந்தது.  தற்போது மயிலாடும் பாறை அருகே செங்குளம், கடமான் குளம், அம்மா குளம் உள்ளிட்ட கண்மாய்  கள் பாதிக்கும் மேற்பட்ட கொள்ளளவை எட்டியுள் ளது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் வரும் நாட்க ளில் அனைத்து கண்மாய்  களும் முழு கொள்ளளவை  எட்டும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை போது மான அளவில் பெய்யாத நிலையிலும் தற்போது கண்  மாய்களில் நீர்மட்டம் உய ர்ந்து வருவதால் விவசாயி களும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.