districts

img

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கிடுக!

 மதுரை, ஜன.9-  மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை  கடந்த 2019-2020, 2020- 2021ல் மழை  இல்லாததால் கடுமையான வறட்சி  ஏற்பட்டு தண்ணீர் இல்லாததால் கரும்பு பதிவு குறைவாக இருந்த தால் அரவை நிறுத்தப்பட்டது. 2021ல் இருந்து தொடர்ச்சியாக ஆலை திறக்க வேண்டும் என்று  போராட்டம் நடத்தப்பட்டு வருகி றது. மேலும் 46 நாட்கள் ஆலை யின் முன்பு ஆலையை திறக்கக் கோரி தொடர் காத்திருக்கும் போரா ட்டமும் நடத்தப்பட்டது.  இதன் விளைவாக தமிழக வேளாண்துறை அமைச்சர் தமிழக  சட்டமன்றத்தில் 2022-2023ல் தேசிய  கூட்டுறவு ஆலை திறக்கப்படும் என்று அறிவித்தார். ஒரு கமிட்டி யும் நியமிக்கப்பட்டு ஆலையை ஆய்வு செய்து ஆலை திறப்பதற்கு  ரூ.27 கோடி செலவாகும் என்று அறிக்கையும் கொடுத்தது. அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு  வந்தால் ஆலையை திறப்போம்  என்று கூறியது. ஆனால் இதுவரை  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் ஆலையில் உப மின் நிலையம் அமைக்க அரசு ரூ. 100 கோடி செலவு செய்து 80%  வேலை முடிந்துள்ளது. 15 வருட காலமாக ஆலையை இயக்காமல் ரூ.110 கோடிக்கான  எந்திரங்கள் (சாமான்கள்) துருப்பிடித்து சேதமாகி உள்ளது. இதுகுறித்து  தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வரும் நிலை யில் தற்போது வரை ஆலை திறக்  கப்படவில்லை. கரும்பு பதிவதற்கு  கரும்பு பீல்டு மேன்கள் போடப்பட வில்லை. ஏற்கனவே ஆலையில் இருந்த ஆட்களையும் வேறு ஆலைக்கு அனுப்பிவிட்டனர். தற்போது இரண்டு லட்சம் டன் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அதில்  ஆலைக்கு பதிவு செய்த கரும்பும் பதிவு செய்யாத கரும்பும் உள்ளது.  அந்த கரும்பு வெட்டி அனுப்புவ தற்கு கூட ஆலையில் எந்த கரும்பு  அதிகாரியும், கரும்பு பீல்டுமேன் கள் இல்லை. எனவே கரும்பு அதி காரிகளை நியமிக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் கரும்பு  விவசாயிகள், ஆலைத் தொழிலா ளர்கள், விவசாயக் கூலிகள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், டிராக்டர் லோடுமேன்கள் என  இந்த தொழிலை நம்பி வாழ்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பேரின் வரு மானம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.  அதனால் அரசு நியமித்த  கமிட்டி சிபாரிசு செய்த ரூ.27 கோடி யை உடனே ஒதுக்கி மராமத்து செய்து இந்த ஆண்டு 2024-2025ல்  ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலங்கா நல்லூர் கேட் கடை அருகே தமிழ்  நாடு கரும்பு சேவை சங்கம் மற்றும் ஆலை தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் வியானழன்று காலை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத்  தலைவர் என்.பழனிச்சாமி தலை மை வகித்தார். கரும்பு விவசாயிகள்  சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் துவக்கி  வைத்து பேசினார். கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் வி. அடக்கிவீரணன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஏ. ராஜேஸ்வரன், கரும்பு விவசாயி கள் சங்கத் துணைத் தலைவர் பி.எஸ்.ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்கா நல்லூர் ஒன்றியச் செயலாளர் கே. தவமணி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.மொக்க மாயன், அரிட்டாபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகன், கோட்டநத்தம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மு. கந்தப்பன் மற்றும் எம்.எஸ்.அய்யங்காளை, எஸ்.கே கணபதி, எம்.ராமன், பி. முனியாண்டி தேவர், மணிவேல், ஏ.போஸ், எம்.நாகராஜன் உட்பட  நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவ சாயிகள், பெண்கள் ஆகியோர் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்  செய லாளர் வி.உமாமகேஸ்வரன் பேசி னார்.