ஒன்றிய மோடி அரசின், விவசாயிகள் பொதுமக்களுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்-2024ஐ கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தவிசா மாவட்ட செயலாளர் கே.நேரு தலைமையில் (ஜூலை.31) புதனன்று காஞ்சிபுரம், காவலன் கேட் அருகில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கேரள அரசை போல் காட்டுப் பன்றிகளை ஒழித்திட வாய் வெடி மருந்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் என்.சாரங்கன், மாவட்ட நிர்வாகிகள் கே.செல்வம் எஸ்.ஆனந்த், டி.வி.ஆனந்தகுமார், கே.ஞானசம்பந்தம் (களக்காட்டூர் விவசாய சங்கம், பரசுராமன் (மா.த விவசாய சங்கம்), தனபால் (த.கரும்பு விவசாய சங்கம்), லட்சுமணன் (இயற்கை விவசாயி), எஸ்.சீனுவாசன், கே.ஆஞ்சலி (தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க), கே.ஜிவா, சுகுமார், ஆனந்தவேல், முர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.