districts

img

செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ராணிப்பேட்டை, ஜூலை 31 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவ சாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதனன்று (ஜூலை 31) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, செயலாளர் எல்.சி. மணி ஆகியோர் தலை மையில் விவசாயிகள் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா விற்கு ஒளிவிளக்கு புத்தகம் அளித்து வாழ்த்தி வரவேற்றனர். பின்னர் நடந்த கூட்டத்தில்,  வாலாஜா அனந்தலை பகுதியில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டும் களிமண் எடுக்க அனுமதி அளித்திருந்த நிலை யில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக புகார் தெரிவித்தனர்.  விவசாய பயிர் காப்பீடு நிறு வனங்கள் கூட்டத்திற்கு வரவில்லை. வன விலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்புகளை தடுக்க தக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிப்காட் தொழிற்சாலை யில் உள்ள நிறு வனங்களால் வெளியேற்றப்படும் கழிவு நீரை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீர் சோதனை செய்யவில்லை. இதனால் சுற்றி யுள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிலையத்தை கம்பீர மாக அமைக்க வேண்டும். உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.