திருச்சிராப்பள்ளி, செப்.5- திருச்சி மாவட்டம் லால் குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தில் லால்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் திண் டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக வேளாண் மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரி இளங் கலை இறுதியாண்டு மாண வர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயம் சார்ந்த பல்வேறு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த பணி களை செய்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய ஊட்டச்சத்து வாரம் செப் டம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி கொண்டாடப் பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக லால்குடி அருகே சிறுமயங்குடி கிரா மத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு அனைவருக்கும் சத்தான உணவு என்னும் தலைப்பில் ஊட்டச்சத்து வாரம் மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து கண்காட்சி நடத்தினர். கண்காட்சியில் இலுப் பைப்பூ சம்பா, வெள்ளை பால், குடவாழை, இரத்த சாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா, அன்னமழகி, சின்னார், அறுபதாம் குறுவை, கல் உருண்டை சம்பா கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிவன் சம்பா, மிளகு சம்பா உள்ளிட்ட 13 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை காட்சிப்படுத்தி அதன் நன்மைகள் குறித்து விவ சாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விரிவாக எடுத்து ரைத்தனர். மேலும் ஊட்டச் சத்துகளால் ஏற்படும் நன்மை கள் குறித்தும் மாணவர்கள் விளக்கிக் கூறினர். நிகழ்வில் லால்குடி வேளாண்மை உதவி இயக்குநர் சுகுமார், உதவி வேளாண்மை அலுவலர் எடிசன், கிராம நிர்வாக அலு வலர் அந்தோணிராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தைவேல் மற்றும் சிறு மயங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.