மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில், அவரது உருவப் படத்திற்கு எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் திருக்களாச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, தென்னங்கன்று, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சம்சாத் ரபீக் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.