districts

img

ஊழியர் பலி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் போராட்டம்

திருநெல்வேலி, ஜன. 1- நெல்லை தச்சநல்லூர் சுகர் மில் அருகே  மின்சார வாரியத்தில் கடந்த 20 வருடங்களாக  ஒப்பந்த ஊழியராக பணி செய்யும் பத்திர காளி என்ற தொழிலாளி விபத்தில் உயிரி ழந்ததை கண்டித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். டிசம்பர் 31 செவ்வாயன்று மாலை 4.15  மணி அளவில்  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த பத்ரகாளி தச்சநல்லூர் சுகர் மில் அருகே பழுதடைந்த மின்சா ரத்தை சரி செய்யும் பொழுது மின்சார கம்பம்  உடைந்து கீழே விழுந்து மரணம் அடைந் துள்ளார். மரணம் அடைந்த பத்திரகாளி என்ற தொழிலாளியை மின்சார வாரியத் தில் பணி செய்யக்கூடிய உயர் அதிகாரிகள்  மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று  விட்டனர். இறந்த தகவலைக்கூட தொழிலாளி யின் வீட்டுக்கு தெரிவிக்காமல்  புதன்கிழமை  தகவலை கூறிவிட்டு இன்னும் வந்து தொழி லாளி இறப்பு சம்பந்தமாக எதுவும் பேசி முடிவெடுக்கப்படவில்லை இறந்த தொழிலாளியின் உறவினர்களும்  சிஐடியு நிர்வாகிகளும் அரசு மருத்துவமனை பிண அறை முன்பு திரண்டனர். இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்  சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். முருகன், மத்திய அமைப்பு திட்டச் செயலா ளர்  கந்தசாமி மின் ஊழியர் மத்திய அமைப்பு  மாநில துணைச் செயலாளர் வண்ணமுத்து ஆகியோர் நஷ்டஈடு தராத வரைக்கும் இறந்தவரின் உடலை வாங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.   மின் ஊழியர் மத்திய அமைப்பு நெல்லை கோட்ட  பொருளாளர் கந்தன் உள்ளிட்ட சி ஐ டி யு மின் ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசாங்கம் மின்சார வாரி யத்தில் ஒப்பந்த தொழிலாளர்களே கிடை யாது என்று திட்டவட்டமாக கூறி வரும் நிலையில் ஆறு மாதத்தில் இதுவரை 5க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்திருக் கிறார்கள். இது சம்பந்தமாக தமிழக அரசு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். மின்சார  வாரியத்தில் உள்ள  60 ஆயிரம் காலி பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆள் பற்றாக்குறையால்தான் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது.  தமிழக அரசின் கவனக் குறைவால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்று சிஐடியு கருதுகிறது. இறந்த தொழி லாளிக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் வரை அவர்கள்  உடலை வாங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனை அடுத்து   இறந்து போன பத்திரகாளி உடல் புதன்கிழமை மாலைவரை உறவினர்களால் பெறப்படவில்லை.