districts

img

அனைத்து ஓய்வூதியருக்கும் ஒரே சதவீத பென்சன் வழங்குக!

திருச்சிராப்பள்ளி, செப்.24 - பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்க 38-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி  ஓய்வூதியர் சங்க சென்னை வட்ட தலை வர் கணபதி தலைமை வகித்தார். நெட்வொர்க் பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயல் சிறப்பு ரையாற்றினார்.  பாரத ஸ்டேட் வங்கி பென்சனர் கூட்ட மைப்பு பொதுச் செயலாளர் சஞ்சீவ் குமார் பாண்டுலிஸ், அமராவதி வட்ட பொதுச் செயலாளர் சர்மா, சென்னை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்க துணை பொது மேலாளர் சஞ்சீவ் குமார், திருச்சி நிர்வாக அலுவலர் சங்க  துணை பொது மேலாளர் நவீன் குமார்,  ஊழியர் சங்க சென்னை வட்ட பொதுச்  செயலாளர் கிருபாகரன், சேவா சங்க சென்னை வட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், மண்டல செயலாளர் கணபதி சுப்ரமணியன், பொதுச் செய லாளர் ரிஷபதாஸ் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். கூட்டத்தில், ஒவ்வொரு இருதரப்பு  பேச்சு வார்த்தை மூலமாக வழங்கப் படும் வங்கி ஊழியர் சம்பள உயர்வுக்கு  ஏற்ப 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலு வையில் உள்ள ஓய்வூதியத்தை தாமத மன்றி திருத்தி, உயர்த்தி வழங்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியின்  ஓய்வூதியர் ஒரு சாரருக்கு இழைக்கப் பட்டிருக்கும் அநீதியை கலைந்து அனைத்து ஓய்வூதியருக்கும் ஒரே சதவீத பென்சன் (50 சதவீதம்) வழங்க  வேண்டும்.  குடும்ப ஓய்வூதியர் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியருக்கும் வங்கி யின் முழு பங்களிப்புடன் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். 7-வது  இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஓய்வு  பெற்றவர்களுக்கு அனைத்து படிகளை யும் உள்ளடக்கி, ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டு உயர்த்தி வழங்க வேண்டும். பணியில் இருக்கும் போது கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி சலுகைகளை ஓய்வுக்குப் பின்னும் நீட்டித்துத் தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன கூட்டத்தில் மாநிலம் முழுவதி லிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பாரத ஸ்டேட்  வங்கி ஓய்வூதியர் சங்க திருச்சி மண்டல செயலாளர் சுப்பிரமணியன் வர வேற்றார். சென்னை வட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.