திருவாரூர், ஜுன் 16 - திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீதியாகராஜா கல்வியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கல்லூரி செயலர் ந.கணேசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பயிற்சி ஆசிரிய மாணாக் கர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோ.உமாமகேஸ்வரி, பேரா சிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.