பெரம்பலூர், செப்.21 - பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ‘போதைப் பொருட்கள் பயன் படுத்த மாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களும் தொடர்ந்து திரையிடப்படுகின்றன. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் வாயிலாக சனிக் கிழமை பெரம்பலூர் மாவட்டம், இரூர் பேருந்து நிலையம், நாட்டார்மங்கலம், குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களின் முக்கிய இடங்களில் பொது மக்கள் காணும் வகையில் போதையில்லாத தமிழ்நாடு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இக்குறும்படங்களை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.