districts

img

தரங்கம்பாடி, சீர்காழியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை நவ-23 மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட  பகுதிகளில் சம்பா சாகுபடி பயிர்கள், வடிகால் வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரங்கம்பாடி வட்டம் கிடாரங் கொண்டான் கிராமத்தில் மழைநீர் சூழ்ந்து வடிந்துள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு, அப்பகுதியில் சாகுபடி பரப்பளவு விவரங்களை வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  தொடர்ந்து, செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட தலைச் சங்காடு கிராமம் காந்தி நகரில் உள்ள வடிகால்வாய்க்கால் பகுதியினை பார்வையிட்டு, தங்கு தடையின்றி மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வாய்க்கால்களில் செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளனவா என்பதனை ஆய்வு செய்தார். பின்னர், தலையுடையவர் கோவில்பத்து கிராமத்தில் உள்ள தாமரைக்குளத்தில் ஆகாயத் தாமரை அகற்றும் பணிகள் நடை பெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பணி களை விரைவாக மேற்கொள்ளு மாறு வட்டார வளர்ச்சி அலு வலர்களிடம் அறிவுறுத்தினார்.  அதனைத் தொடர்ந்து, சீர்காழி வட்டம் பழையார் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர்  சூழ்ந்துள்ளதாக செய்தி பெறப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்  நேரடியாக சென்று அப்பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.  மேலும், இனிவரும் காலங்களில் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழாத வகையில், தேவையான வடிகால் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அப்பகுதி மக்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.