திருச்சிராப்பள்ளி, ஜூன் 26-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை யில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந் தது.
கூட்டத்தில் திருவானைக்காவல் மேலகொண்டையம்பேட்டை தெற்குத் தெரு, வடக்குத் தெரு, கீழத்தெரு பொதுமக் கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊர்பகுதியில் கடந்த சில வருடங்களாக மணிகண்டன் என்பவர் தலைமையில், சுமார் 20 பேர் கொண்ட கும்பல், இங்கு வசிக்கும் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வரு கின்றனர்.
இவர்கள் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வது, பெண்களை கேலி செய்வது மற்றும் அவர்களை தகாத வார்த்தையில் பேசுவது, வழிப்பறிக் கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊர் பெரியவர்கள், முக்கியஸ்தர்கள் தடுத்து கேட்டால் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள வர்களை தகாத வார்த்தைகளால் பேசி, ஆயுதங்களால் தாக்கிவிட்டு தலைமறை வாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ள னர். எனவே இவர்கள்மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும்” என தெரி வித்துள்ளனர்.