அறந்தாங்கி, பிப்.16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில், அறந்தாங்கி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, நாகுடி அரசு சீர்மரபினர் மாணவியர் விடுதி, சுப்பிரமணியபுரம் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி ஆகிய மூன்று விடுதிகளை சேர்ந்த 120 மாணவிகளுக்கு ரூ 25 ஆயிரம் செலவில் குளிர் தாங்கும் போர்வைகள் வழங்கப்பட்டன. அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி தலைமையில் செயலாளர் ஆன்டோ பிரவின் பொருளாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலையில் ரோட்டரி 3000 துணை ஆளுநர் மருத்துவர் விஜய் துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள், மருத்துவர் செல்ல செந்தமிழ் செல்வன், சமூக ஆர்வலர் ரியாஸ் அகமது, அறந்தாங்கி விடுதி காப்பாளினி மணிமேகலை ஆகியோர் மாணவிகளுக்கு போர்வைகளை வழங்கினர். முன்னதாக நாகுடி சீர்மரபினர் அரசு மாணவியர் விடுதி காப்பாயிளினி சந்தான லட்சுமி வரவேற்றார். சுப்பிரமணியபுரம் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி காப்பாளினி சுமதி நன்றி கூறினார்.