districts

காமராஜர் சந்தையில் மாத வாடகை செலுத்தாத கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.21-  தஞ்சாவூர் காமராஜர் சந்தையில் மாத வாடகை செலுத்தப்படாத கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை மின் இணைப் பைத் துண்டித்ததைக் கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தஞ்சாவூர் காமராஜர் காய்கறி சந்தை பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், ரூ.20.26 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு, 2022, நவம்பர் 22 ஆம் தேதி திறக் கப்பட்டது. இதில், பெரிய கடைகளுக்கு ரூ.18 ஆயிர மும், சிறிய கடைகளுக்கு ரூ.6 ஆயிரமும் மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டது. இச்சந்தையில் மாத வாடகை செலுத்தப்படாமல் சில மாதங்களாக நிலுவை வைத்துள்ள வியாபாரிகள், அத்தொகையை ஒரே தவணையில் செலுத்தமாறு மாநகராட்சி அலுவலர்கள் கூறி வந்தனர்.  இந்நிலையில், வாடகை செலுத்தப்படாத 20 க்கும் அதிகமான கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை துண்டித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சந்தை வளா கத்தில் கூடி, மாநகராட்சி நிர் வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  கால அவகாசம் வேண்டும்  கடை வாடகை மிக அதிக மாக இருப்பதால், குறைக்கு மாறு மாநகராட்சி நிர்வா கத்திடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். முன்பு பரபரப்பாக இருந்த இந்தச் சந்தைக்கு தற்போது பொதுமக்கள் வருவதும் குறைந்துவிட்டது. இத னால், வியாபாரம் குறைந்து விட்டதால், எங்களது வாழ் வாதாரமும் பாதிக்கப்பட்டு, வாடகை செலுத்த முடிய வில்லை.  இந்நிலையில், கடை வாடகை செலுத்தவில்லை எனக் கூறி மின்சாரத்தை துண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?. இதனால், எங்க ளது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வா கம் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண் டும். நிலுவை வாடகைத் தொகையைச் செலுத்துவ தற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். மிக அதிகமாக உள்ள வாடகையைக் குறை க்க வேண்டும். சந்தையில் போதிய அடிப்படை வசதி களைச் செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.