districts

img

நீச்சல் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தரங்கம்பாடி வருகை

மயிலாடுதுறை, ஆக.10 - இராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா வரை 604 கி.மீ தொடர் நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகள் குழுவினர் தரங்கம்பாடி வந்தடைந்து வெள்ளியன்று  அங்கி ருந்து நீச்சல் பயணத்தை தொடர்ந்தனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளா லும் சாதிக்க முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள ஸ்டேட் டெவ லப்மென்ட் அதாரிட்டி ஆஃப் தமிழ்நாடு (எஸ்டிஏடி) உடன் இணைந்து வேவ் ரைடர்ஸ் விளையாட்டுக் குழு உலக சாதனை முயற்சியாக நடத்தும் இந்தப் பயணத்தில், மாணவர்கள் 15  பேர் இராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீட்டர்  தொடர் நீச்சல் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இராமேஸ்வரத்தில் கடந்த ஆக.5 அன்று கடற்பயணத்தை தொடங்கிய இவர்கள் நாளொன்றுக்கு 50 கி.மீ வரை  12 மணி நேரம் பயணித்து தரங்கம்பாடியை  வந்தடைந்தனர். அங்கிருந்து வெள்ளி யன்று கடல்வழியாக பழையாறு நோக்கி புறப்பட்டனர். 10 நாள் முடிவில் இவர்கள் ஆகஸ்ட் 15 அன்று சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பகுதியில் தங்கள் சாதனையை நிறைவு செய்ய உள்ளனர். இந்த சாதனை நீச்சல் பயணத்தில் 11  வயது மாணவர் சித்தார்த், முற்றிலும் பார்வைத்திறன் அற்ற மாணவர் லக்ஷய்குமார் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள், இரு கால்களும் செயல் படாதவர்கள் என பல்வேறு மாற்றுத் திறன் கொண்டவர்கள் பங்கேற்றுள்ள னர்.  இந்த உலக சாதனை வேர்ல்டு ரெக்கார்ட் யூனியனில் பதிவு செய்யப் படவுள்ளது. ஆக.15 அன்று, 15 குழந் தைகள் இணைந்து மாபெரும் உலக சாதனை புரிய இருக்கிறார்கள். கடற் பயணம் மேற்கொண்டுள்ள மாணவர் களுடன், அவர்களது பெற்றோர், மருத்துவக் குழுவினர் ஆகியோர் பைபர் படகில் உடன் சென்று அவர்களை  உற்சாகப்படுத்துகின்றனர். சாதனை நீச்சல் பயணத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று  வாழ்த்துகின்றனர்.