திருவாரூர்,ஆக..21 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரியத்தி்ல் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் படுத்தக் கோரி குடும்பத்துடன் தர்ணா போ ராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு திட்ட துணைத் தலைவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமை வகித்தார், மண்டலச் செயலாளர் எஸ்.ராஜா ராமன், திட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், தலைவர் எம்கேஎன். அனிபா ஆகியோர் பேசினர். இதில் திட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ், திட்டப் பொருளாளர் ஆர்.முகேஷ், கோட்டத் தலை வர்கள் ஜி.வீரபாண்டியன்,கே.வினோத், டி.குமார் உள்ளிட்ட மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.