கரூர், செப்.6 - அரசாணை 204 இன்படி ஓய்வூதியர் களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்க உறுதிப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத் தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் தர்ணா நடைபெற்றது. கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.சுந்தரகணேசன் தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.பிச்சுமணி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தின் எம்.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் கெ.சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்டச் செயலாளர் சி.கோபால், அரவக்குறிச்சி வட்டத் தலைவர் வீர மலை, மாவட்ட துணைத் தலைவர் ராமை யன், முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்.கண்ணன், மண் மங்கலம் வட்ட கிளைச் செயலாளர் ராஜ மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.