districts

img

மின் கணக்கீட்டு பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன்,19 தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் மின் கணக்கீட்டு  பிரிவில் காலிப்பணியிடங்க ளை உடனே நிரப்ப வேண்டும். செல்போன் செயலி மூலம் கணக்கீட்டு பணி செய்ய செல்போன் அல்லது கைய டக்க கணினி(டேப்) வழங்க வேண்டும். செல்போன் டேட்டா ரீசார்ஜ் செய்ய மாதம் தோறும் ரூ.500 வழங்க வேண்டும். பல ஆண்டுகளு க்கு முன்பு வழங்கப்பட்ட கணினி உபகரணங்களை மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில்   ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி பெருநகர வட்டக்கிளை தலை வர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் உரையாற்றினார்.  திருவாரூர்  திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  திட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டலச் செய லாளர் எஸ்.ராஜா ராமன், சிஐடியு மாவட்டச் செயலாளர்  டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். திட்டச் செயலாளர் கே.ராஜேந் திரன்,கோட்ட செயலாளர்  ஜி.வீரபாண்டியன், கோட்ட தலைவர் குமார் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.