திருப்பூர், டிச.13- பிஎஸ்என்எல் தமிழ் மாநில நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந் திய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங் கம், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கம் இணைந்து புதனன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி எம்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூ தியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் முக மது ஜாபர், மாவட்டத் தலைவர் சௌந்தர பாண்டியன், மாவட்ட சிறப்பு அழைப்பாளர் பழனிவேல்சாமி, கிளைச் செயலாளர் விஸ்வ நாதன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஒப் பந்த ஊழியர் சங்க மாநில துணைத் தலை வர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். முடிவில், சங்கிலித் துறை நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் தமிழ் மாநில நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டத்து. முன்னதாக, தொழிற்சங்க முன்னோடி கே.ஜி.போஸின் நினைவு நாள் மற்றும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு அவர்க ளின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத் தப்பட்டது.