திருச்சிராப்பள்ளி, ஏப்.5 - 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு, விவசாய சங்கங் கள் சார்பில் தில்லியில் நடைபெற்ற பேரணிக்கு ஆதரவாக சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட் டச் செயலாளர் ரெங்கராஜன் பேசி னார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்டத் தலைவர் மா.கண் ணன் தலைமை வகித்தார். விதொச மாநில குழு உறுப்பினர் சி.நாக ராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.கணே சன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத் தில், காவிரி டெல்டா மண்ட லத்தில் நிலக்கரி எடுப்பதற்கான ஒப் பந்தத்தை கண்டித்தும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.