districts

img

டெல்டா மாவட்ட அரவை ஆலைகளுக்கு நெல் வழங்குக!

தஞ்சாவூர், பிப்.20 -  டெல்டா மாவட்ட அரவை ஆலை களுக்கு நெல் வழங்கக் கோரி தஞ்சாவூரில் செவ்வாயன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெல்டா மாவட்டங் களில் கொள்முதல் செய்யும் நெல்லை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை மாவட்ட அரவை  முகவர்களின் ஆலைகளுக்கு தேவையான நெல்லை இருப்பு  வைக்காமல், வெளி மாவட்டங் களுக்கு இயக்கம் செய்யப்படு கிறது. ஆலைகளுக்கு அரவைக்கு நெல் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடு துறை மாவட்ட அரவை முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில், செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தஞ்சாவூர் மாவட்ட அரவை முகவர்கள் சங்கத் தலைவர் ஏ.பக்கிரிசாமி தலைமை  வகித்தார். மாவட்டத் தலைவர்கள் எஸ்.எம்.குணசேகரன் (திருவா ரூர்), வி.பச்சையப்பன் (நாகப்பட்டி னம்), சி.ஆறுமுகம் (மயிலாடு துறை) மற்றும் டெல்டா மாவட்டங் களைச் சேர்ந்த 90 அரவை ஆலை  முகவர்கள், அவற்றில் பணியாற்றும்  500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து அரவை ஆலை நிர்வாகிகள் கூறுகையில், “டெல்டா  மாவட்டங்களில் நெல் சாகுபடி  தவிர்த்து, வேறு எந்த பெரிய தொழில் களும் கிடையாது. இங்கிருக்கும் ஒரே தொழிற்சாலை அரிசி அரவை தொழிற்சாலை மட்டுமே. இந்த தொழிற்சாலைகளை நம்பித்தான் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  இதுநாள் வரை ஆண்டுக்கு 10  மாதங்களுக்கு அரவைக்கு நெல்லை  இருப்பு வைத்து வழங்கிக் கொண்டி ருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்த ஆண்டு நெல்லை இருப்பு வைக்காமல் வெளி  மாவட்டங்களுக்கு அனுப்பி வைக் கிறது. இதனால் அரவைக்கு நெல்  இல்லாமல் அரவை முக வர்களும் அரவை ஆலைத் தொழி லாளர்களும், அந்த தொழிலை  நம்பி உள்ள லாரி உரிமையா ளர்கள், ஓட்டுநர்கள், சுமை தூக்கும்  தொழிலாளர்கள், டெல்டா மாவட்டங் களில் உள்ள குடோன்களில் பணி யாற்றும் சுமைதூக்கும் தொழிலா ளர்கள் என ஆயிரக்கணக்கா னோரின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. எனவே, டெல்டா மாவட்ட மக்களை பாதுகாக்க இருக்கிற ஒரே  தொழிற்சாலையான அரவை தொழில் பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசு இப்பிரச்சனையில் உட னடியாக தலையிட்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள தொழிற் சாலைகளுக்கு மட்டுமே அரவைக்கு  நெல் வழங்க வேண்டும்” என்றனர்.