districts

img

செவிலியர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.5 - ஆரம்ப சுகாதார செவிலியர் களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஓரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பணி முடித்து வீடு திரும்பிய செவிலி யர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கயவர் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஊழியர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர் பாதுகாப்பு சட்டம், மருத்துவமனை பாதுகாப்பு சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் பணி செய்யும் செவி லியர்கள் மீதும், அரசு ஊழியர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப் படுவதை கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் திங்களன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால் பாண்டி மற்றும் எம்ஆர்பி செவிலி யர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கோமதி ஆகியோர்  தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் நவநீதன், நந்தினி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாவட்டத் தலை வர் சிராஜுதீன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில துணைத் தலைவர் ராகவன், இணைச் செயலாளர் சுஜாதா, ஜனநா யக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி, மருத்துவர்கள் விமல் ஆனந்த்,  ஜோஸ்பின், சுகாதார ஆய்வாளர் தயாநிதி, செவிலியர் வளர்மதி, பீரீடா,  மகளிர் துணைக் குழு அமைப்பாளர் அமுதவல்லி மற்றும் அனைத்து துறை  சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றி னர். மாநில துணைத் தலைவர் பெரிய சாமி நிறைவுரை ஆற்றினார். வட்டக் கிளை பொருளாளர் பாரதி நன்றி கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கோரிக்கைகள் குறித்து  மனு கொடுக்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலி யர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், மருத்துவமனைகளில் பணிபுரியும், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்  கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பெருந்திரள்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் செவிலியர் எஸ். சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி  வைத்து பேசினார். செவிலியர் ஆர். ரஷ்யா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்தி ரன், தமிழ்நாடு வனத்துறை பணியாளர்  சங்க மாநிலச் செயலாளர் தமிழ்மாறன்  உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றி னர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி நிறைவுரையாற்றினார், தன. ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.  ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், மாவட்ட  ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது.