districts

img

டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி திருவாரூர் விளமலில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என் அனியா, சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர்.