திருச்சிராப்பள்ளி, செப்.23 - சாதி ஆணவப் படுகொ லைக்கு எதிராக சட்டம் இயற்றக் கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி யில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணும், ஆணும் காதலித்து வந்தனர். அவர் களது குடும்பத்தினர் அவர் களின் காதலை ஏற்றுக் கொள்ளாததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முன்வந்தனர். இதனை யறிந்த பெண் வீட்டாரும், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புரை செய லாளருமான நிர்வாகி ஒரு வர், அந்த காதலர்களை பின் தொடர்ந்து சென்று வழி மறித்து, இருவரையும் பிரித்துள்ளார். இதுமட்டுமின்றி, பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த காதலனை மிகக் கடு மையாக தாக்கி, அவரது சாதிப் பெயரை சொல்லி, அந்த இளைஞரின் ஆணு றுப்பில் மிகவும் கொடூர மான முறையில் தாக்கியுள்ள னர். இதனால் கடும் பாதிப்புக்குள்ளான அந்த இளைஞர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை யில் உள்ளார். இந்த சம்ப வத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப் புரை செயலாளர் உட்பட நான்கு பேரை திருச்சி காவல் துறையினர் பிடித்து சிறை யில் அடைத்துள்ளனர். இதுபோன்ற ஆணவப் படுகொலையில் ஈடுபடுகிற சாதிய சமூக விரோதி களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட சாதி மறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். சாதிய வன்கொ டுமைக்கும் ஆணவ படுகொ லைக்கும் எதிராக கடும் சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் திங்களன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மோ கன், புறநகர் மாவட்டச் செய லாளர் ஆமோஸ் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர். புறநகர் மாவட்டத் தலைவர் வைர வளவன் நன்றி கூறினார்.