districts

img

மின்துறையை தனியாருக்கு விற்க எதிர்ப்பு!

தஞ்சாவூர், டிச.9- மின்சார சட்டத் திருத்த மசோ தாவை கைவிட வலியுறுத்தியும், மின்துறையை தனியாருக்கு விற்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், மின்வாரிய அனை த்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, வடசேரி, மதுக்கூர், பட்டீஸ்வரம், துவரங் குறிச்சி, நாடியம், அய்யம் பேட்டை ஆகிய இடங்களில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சை மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயி லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜா ராமன் தலைமை வகித்தார். மின் சாரத் தொழிலாளர் சம்மேளன செயலாளர் பொன்.தங்கவேலு, ஐக்கிய சங்க பொருளாளர் பார வேல், பொறியாளர் சங்க செயலா ளர் சுந்தர், அண்ணா தொழிற் சங்க நிர்வாகி குணசேகரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் பி.காணிக்கைராஜ், பொறியாளர் கழகம் சார்பாக மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.  பொறியாளர் சங்க மாநிலப் பொருளாளர் கார்த்திகேயன் நிறைவுரையாற்றினர். இதில், அனைத்து சங்ககங்களை சார்ந்த மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

;