தஞ்சாவூர், செப்.7 - அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசி யதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கை கருத்துகளையும், மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய மகாவிஷ்ணுவை கண்டித்தும், அரசுப் பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதை கண்டித் தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத் திந்திய மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்திய தொழிற் சங்க மையம் ஆகியவற்றின் சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலை யம் அருகே கண்டன நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சந்துரு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, சிபிஎம் மாந கரச் செயலாளர் வடிவேலன், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்ட பாணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலா புதீன் ஆகியோர் பேசினர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி நிறைவுரையாற்றினார்.