districts

img

தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்காத டிபிடிஆர் தேசிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆக.11 -     மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் பழமையான பள்ளியான டிபிடி ஆர் தேசிய மேல்நிலைப் பள்ளியில்  அரசு விதிகளின்படி தலைமையாசிரி யருக்கான பதவி உயர்வை வழங்கா மல், சட்டவிதிகளுக்கு எதிராக செயல் படும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அப்பள்ளி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  மாவட் டத் தலைவர் ப.அருள் தலைமை வகித் தார். மாநில பொதுச் செயலாளர் பொ. அன்பழகன், மாநிலத் தலைவர் எஸ்.பிரபாகரன், மாவட்டச் செயலாளர் இரா. கர்த்திக், மாவட்ட பொருளாளர் கே. விஜயபாலன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் கடந்த 18 ஆண்டுகளாக மூத்த முதுகலை ஆசிரியராக இரா.கலைவாணன் என்பவர் பணி யாற்றி வருகிறார். சென்ற கல்வியாண்டி லிருந்து உதவித் தலைமையாசிரியர் பணியையும் சிறப்பாக செய்துவரும் நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஓய்வு பெற்றார். இதையடுத்து அரசு  விதிமுறைகளின்படி பணியில் மூத்த  முதுகலை ஆசிரியர், தலைமையாசிரி யராக நியமிக்கப்பட வேண்டும்.  ஆனால் விதிகளுக்கு மாறாக அரசு விதிமுறைகளை முற்றிலும் மதிக்கா மல் 10 ஆண்டுகூட முதுநிலை ஆசிரியர்  பணியை பூர்த்தி செய்யாத 8 ஆவது  நிலையில் இருக்கும் ஒருவருக்கு தலை மையாசிரியர் (பொ) பதவியை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. உடனடி யாக மூத்த முதுநிலை ஆசிரியரான இரா.கலைவாணனுக்கு அரசு விதிக ளின்படி தலைமையாசிரியர் பொறுப்பு  வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத் திடம் கடிதம் மற்றும் பேச்சுவார்த்தை மூலமாக வேண்டுகோள் விடுத்தும், பள்ளி நிர்வாகம் நியாயமான கோரிக்கையை அமல்படுத்தாமல் உள் நோக்கத்துடன் மறுத்து வருகிறது. சமூக நீதி மறுக்கப்பட்டுள்ள முது நிலை ஆசிரியர் இரா.கலைவாண னுக்கு தலைமையாசிரியர் பொறுப்பு வழங்க வலியுறுத்தியும், அரசு விதி களை அமல்படுத்த மறுக்கும் பள்ளி  நிர்வாகத்தை கண்டித்தும், இப்பிரச் சனை குறித்து தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பள்ளிக் கல்வித் துறையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கல்வி மாவட்டத் தலைவர் ஏ.சக்கரவர்த்தி நன்றி கூறி னார்.