districts

திருச்சி முக்கிய செய்திகள்

பழைய வீடு இடிப்பு:சுவரிடிந்து விழுந்து 2 பேர் பலி

பாபநாசம், டிச.2 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பழைய வீட்டை  இடித்த போது, இடிபாடுகளில் சிக்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவு தீன் தெருவில் வசிப்பவர் பைசல். இவர் அயல் நாட்டில் பணி யில் உள்ளார். இவரது பழைய வீட்டை இடிக்கும் பணி நடந்து  வந்தது. இப்பணியில் அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப் பள்ளியைச் சேர்ந்த மணி (28), அய்யம்பேட்டை இரட்டை  தெருவைச் சேர்ந்த குமார் (23) ஆகியோரும் ஈடுபட்டனர்.  இந்நிலையில் ஞாயிறன்று வீட்டை இடித்துக் கொண்டிருக்கும்  போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இந்த  இடிபாடுகளில் சிக்கி இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீ சார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மர நாய்களை  வைத்திருந்தவர்கள் கைது

தஞ்சாவூர், டிச.2 -  தமிழ்நாடு அரசால், தடை செய்யப்பட்ட அரிய வகை வன  உயிரினமான மர நாய்களை இறந்த நிலையில் இறைச்சிக் காக வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்திற் குட்பட்ட பேராவூரணி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட அழிந்து வரும் அரிய வகை வன உயிரினமான 2 மர நாய்களை இறந்த நிலையில், துறவிக்காடு டாஸ்மாக் கடை  அருகே இறைச்சி விற்பனைக்காக வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

 இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், வனவர் சிவசங்கர், வனக் காப்பாளர் பாரதிதாசன் ஆகி யோர் அங்கு மர நாய்களை வைத்திருந்த இருவரை பிடித்து  பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகம் அழைத்து சென்று  விசாரணை நடத்தினர்.

அதில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,  முடச்சிக்காடு கிராமத்தை எம்.தனுஷ் (21), பேராவூரணி ஒன்றி யம் துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.விஜயசந்துரு (34)  எனத் தெரிய வந்தது.  பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிந்து, பேராவூரணி  நீதிமன்றத்தில் நீதிபதி அழகேசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட னர். நீதிபதி உத்தரவின் பேரில், 13 நாள் நீதிமன்றக் காவலில் புதுக்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மனு அளிக்க வந்த நூறு நாள்  பெண் தொழிலாளி மயங்கி விழுந்தார்

அரியலூர், டிச.2 - நூறுநாள் வேலை செய்ததற்கான கூலித் தொகை கேட்டு  ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வர் செல்லக்கண்ணு மனைவி பழனியம்மாள் (55).

இவர்  கடந்த ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர் ஆகிய மாதங்களில் 100  நாள்கள் வேலையில், 21 நாள்கள் வேலை செய்த நிலையில்  தனக்கு கூலி, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பதால், அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி யிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். அப்போது மனு அளித்த சிறிது நேரத்தில் அங்கேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, அரியலூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பழனியம்மாள்  சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக அதி காரிகள் ஆய்வு செய்ததில், வேலை செய்ததற்கான கூலி அவ ரது பெயரில் உள்ள மற்றொரு வங்கி கணக்கில் செலுத்தப் பட்டிருப்பது தெரியவந்தது. ஏற்கனவே, பணம் பெற்று வந்த வங்கிக் கணக்கில் ஆதார்  எண் இணைக்கப்படாததால் கூலி பணம் அந்த கணக்குக்கு செல்லவில்லை என்பது தெரிந்தது. இதுகுறித்த தகவல் அந்த  பெண்மணிக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கல்வி உபகரணங்கள் வழங்கல்

பாபநாசம், டிச.2 - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாளை யொட்டி, தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் அய்யம்பேட்டை, பசுபதிகோயில் ஊராட்சி  ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகர ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராஜா சீனிவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 120 மாணவர்களுக்கு ஜாமெண்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டது. இதில் அய்யம்பேட்டை பேரூர் கழக செயலர் துளசி அய்யா,  அய்யம்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன்,  ஒன்றியக் கவுன்சிலர் பாபி சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.