தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 392 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பட்டுக்கோட்டை வட்டம் (லேட்) ரமேஷ் ராஜேந்திரன் குவைத் நாட்டில் இறந்ததையடுத்து, அவரது குடும்பத்துக்கு சேர வேண்டிய மானிய நிதித் தொகை ரூ.39,51,233-க்கான காசோலைகளை வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.