districts

img

அனைத்துத் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்/தஞ்சாவூர், ஆக.10 - ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளையும், மூன்று குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்  பெற வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, தொமுச  ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே தேசியக்கொடி ஏற்றி வைத்து குற்ற வியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச்  செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். போராட்டத்தை ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஜெ.குணசேகரன் துவக்கி  வைத்தார். தொழிற்சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட் டத்திற்கு தொமுச மாவட்டக் குழு உறுப்பி னர் சி.பாஸ்டின், ஏஐடியுசி மாநிலச் செயலா ளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஐஎன்டியுசி  மாவட்ட பொதுச் செயலாளர் என்.மோகன் ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் கே. ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். விசிக தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் அ. யோகராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.