திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- பொதுமக்கள் பயன்படுத்திய சாலை களை அடைத்துள்ள ரயில்வே நிர்வா கத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக லட்சக் கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 4 சாலைகளை அடைத்து, பொது மக்களை அவதிக்குள்ளாக்கும் ரயில்வே நிர்வாகத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும், மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, மாஜி ராணுவ காலனி, அம்பிகாபுரம், மகாலெட்சுமி நகர், நாகம்மை வீதி, மூகாம்பிகை நகர், மாருதி நகர், விவேகானந்தா நகர், ஆலத்தூரில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில்வே தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழி லாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்திய சாலையை மூடிய ரயில்வே நிர்வாகத்தின் போக்கில் ஒன்றிய அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும். மக்களின் பயன்பாட்டிற்கு பொது பாதையை அமைத்துக் கொடுத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ரயில்வே பணிமனை, ரயில்வே மருத்துவ மனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வசதியாக சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் காலனி பகுதி யில் செய்து கொண்டிருக்க கூடிய வேலையின் வரைபடத்தை வெளிப்படை தன்மையுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி பொன்மலை பகுதிக்குழு, அனைத்து நலச் சங்கங்கள், வியாபாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பில் ஞாயிறன்று பொன்மலை சந்தை அருகில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. கையெழுத்து இயக்கத்துக்கு சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமை வகித்தார். கையெழுத்து இயக் கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். இதில் வியாபாரிகள் சங்க செயலாளர் தர்மராஜ், சிபிஎம் பொன்மலை பகுதிச் செயலாளர் விஜ யேந்திரன், வாலிபர் சங்கப் பகுதி செயலா ளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.