districts

திருச்சி முக்கிய செய்திகள்

குறை கேட்புக் கூட்டம்

அரியலூர், அக்.22 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள் கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிட மிருந்து 308 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமை  வகித்து, பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசா ரணை மேற்கொண்டு நட வடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

குட்கா விற்ற கடைக்கு சீல்

தஞ்சாவூர், அக்.22 -  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள  மொத்த விற்பனை மளி கைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட் கள் மொத்தமாக கடத்தி  வரப்பட்டு, சில்லறை விற் பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர். சித்ரா, மருத்துவக் கல்லூரி  காவல் நிலைய ஆய்வாளர் வி.சந்திரா உள்ளிட்டோர் அக்கடைக்கு திங்கள் கிழமை சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கடைக்கு பின்புறமுள்ள கிடங்கில் 3 கிலோ குட்கா  புகையிலை பொருள்கள் இருந்ததும், பெங்களூரி லிருந்து மளிகை பாக் கெட்டுகள், தக்காளியுடன் சேர்த்து வாங்கி வந்து  விற்பனை செய்யப்படுவ தும் தெரிய வந்தது. இதை யடுத்து, அலுவலர்கள் அந்தக் கடையை பூட்டி சீல்  வைத்தனர்.

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், அக்.22 -  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதி களான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபு ராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 158 விவசாயிகள் 17 மெ.டன் பருத்தியை விற்ப னைக்காக எடுத்து வந்திருந்தனர். இதில் கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 4 வணிகர்கள் கலந்து கொண்டு  அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.6899, குறைந்தபட்சம் ரூ.5209, சராசரி ரூ.5899 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.10  லட்சம்.  ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சா யினி தலைமை வகித்தார்.   மேற்பார்வையாளர் சிவானந்த்  முன்னிலை வகித்தார். மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தில் கருப்பு கவுனி நெல்  ரகம் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.9000-க்கும், கருங்குறுவை நெல் ரகம் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.3000-க்கும், மாப்பிளை சம்பா நெல் ரகம்  அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.4000-க்கும், மைசூர் மல்லி நெல் ரகம் அதிகபட்ச விலையாக குவிண்டா லுக்கு ரூ.3500-க்கும், கொப்பரை (2வது ரகம்) அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.8000-க்கும், எள் அதிகபட்ச  விலையாக குவிண்டாலுக்கு ரூ. 14000-க்கும் விற்பனையா னது. எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும், ஏல முறையில் தரத்திற் கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்துத் தரப்படுகிறது.

அணுகு சாலையை விரைந்து அமைக்க தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, அக்.22 - திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அணுகு சாலையை விரைவில் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை யின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி கடந்த 16 ஆண்டு களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி களும் பொது நல அமைப்புகளும் போராடி வருகின்றன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்த தொகுதியின் எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது  2016 மற்றும் 14/6/2018 தேதியில் சட்ட மன்றத்தில் சர்வீஸ் சாலை அமைக்க கோரி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு  வந்து வலியுறுத்தி பேசினார். 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சா ரத்தில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கடந்த 8.8.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்பகுதி நலச்சங்க நிர்வாகிகளுடன் நடை பெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பள்ளிக்  கல்வித்துறை அமைச்சரும், நகர்ப்புற  வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தின் முடிவாக சர்வீஸ் சாலை (அணுகு சாலை) அமைக்கப்ப டும் என்று அறிவித்தீர்கள். ஆனால் சர்வீஸ் சாலை அமைக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.  இந்நிலையில் கடந்த அக்.18 அன்று உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சர்வீஸ் சாலை அமைக்க தயாராக இருப்பதாகவும், மாநில அரசுதான் நிலங்களை கையகப்படுத்தி தரவில்லை” என பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிகிறோம். இதில்  மாநில அரசு உரிய பதில் மனு தாக்கல்  செய்யாமல், கால அவகாசம் கேட்டு  வாய்தா வாங்கி இருக்கிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு விசா ரிப்பதாக மாண்புமிகு நீதியரசரால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட மக்களை உயிர் பலி  வாங்கிய திருச்சி - தஞ்சை நெடுஞ்சா லையில் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்த நிலைப்பாட்டை பள்ளி கல்வித் துறை, அமைச்சர் மற்றும் தமிழக அரசு பொது மக்களுக்கு தெளிவுபடுத்திட வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும்  முடிவை கைவிட கோரிக்கை

கரூர், அக்.22 - நெடுஞ்சாலை ஆணை யம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டுமென வலி யுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு நெடுஞ் சாலை ஆணையம் அமைக் கும் முடிவினை கைவிட வேண்டும். சாலை  பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை வரன்முறை செய்திட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் கோட்ட  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் உட்கோட்ட பொருளாளர் ரா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் பொன்.ஜெய ராம், மாவட்ட பொருளாளர் ஆர்.சிவகுமார், மாவட்டச்  செயலாளர் லோ.பாலசுப்ர மணி, அரசு ஊழியர் சங்க  மாநிலச் செயலாளர் இளங்கோ ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தைல மரக் காடுகளை  அகற்றக் கோரி தொடர் பிரச்சாரம்

புதுக்கோட்டை, அக்.22 - புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைலமரங்களை அகற்றக் கோரி 2025 பிப்ரவரி மாதம் முதல் பிரச்சாரம் நடத்தப்படும் என அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் சார்பில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பில் தைலமரங்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது காப்புக்காடுகளில் பெரும்பாலானவை தைலமரக் காடுகளாகவே உள்ளன. இதனால், வேறெந்த உயிரினங்களும் வாழ முடியாமல் பல்லுயிர் பெருக்கத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.  பல்லுயிர்ச் சூழலுக்கு எதிராக தைல மரக்காடுகள் உள்ளதால், மாவட்டம் முழுவதுமே வறட்சி கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் தொடர் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. தைல மரங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய, நீதிமன்றத்தால் 6 வல்லுநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் விவசாயத்தை அழிக்கும் வகையில் தைல மரக்காடுகளை திணிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக தைலமரக் காடுகளை அப்புறப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.  வரும் பிப்ரவரி மாதம் முதல், மாவட்டம் முழுவதும் தைலமரக் காடுகளை அப்புறப்படுத்தக் கோரி பிரச்சார இயக்கத்தையும், கையொப்ப இயக்கத்தையும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளோம்” என்றார் ரவீந்திரநாத். பேட்டியின்போது, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், மணிமோகன், மாவட்டச் செயலர் அன்பு மணவாளன், மாவட்டத் தலைவர் வெள்ளத்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

திருச்சிராப்பள்ளி, அக்.22 - குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்  பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்  ஜான்சன் பிரான்சிஸ், செயலாளர் மு. மணிகண்டன் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி  செல்லும் மாணவர்கள் மத்தியில் அறி வியல் கண்ணோட்டத்தை வளர்க்கவும், ஆய்வு மனப்பான்மையை மேம்படுத் தவும், நிகழாண்டு ‘நீடித்த பாது காப்பான நீர் மேலாண்மை’ என்ற கருப்பொருளின்கீழ் குழந்தைகள் அறி வியல் மாநாடு நடைபெற உள்ளது. 11 வயது முதல் 17 வயது வரையுள்ள பள்ளி மாணவர்கள் இருவர் குழு வாகச் சேர்ந்து ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர் அல்லது கல்லூரி மாணவர் ஒருவரின் வழிகாட்டுதலில் நீர்  சூழலும் பாதுகாப்பும், நீர் சார்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீர்  சார்ந்த நோய்கள், நீர் அனைவருக் குமானது, நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப  யுக்திகள் ஆகிய தலைப்புகளில் ஏதே னும் ஒன்றின்கீழ் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுகளை அறிவியல் வழி முறைப்படி செய்து, ஆய்வு அனுப வங்களை தொகுத்து ஆய்வுக் கட்டுரை தயாரித்து, அதனை வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாவட்டக் குழந்தைகள் அறிவியல் மாநாடுகளில் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, அறிவியல் ஆய்வுரை நிகழ்த்த வாய்ப்பளிக்கப்படும். மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து இளம் விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த மாநாட்டில் பங்கேற்க 94437 50155,  78457 29890, 97878 66135 ஆகிய  கைப்பேசி எண்களில் தொடர்பு கொள் ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.