districts

img

பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி நூறுநாள் வேலை பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.21- பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி,  தஞ்சாவூர் மாவட்டம், அம்மா பேட்டை பேருந்து நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், புதன் கிழமை மாலை கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் வி.ரவி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் என்.வி.கண்ணன், கே.பக்கிரிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.நம்பி ராஜன் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், அம் மாபேட்டை ஒன்றியம் உக் கடை, நெடுவாசல் பஞ்சாயத் துகளில் வங்கிக்கடன் ரூ.1 லட்சம் வாங்கித் தருவதா கவும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாகவும், 100 நாள் வேலையை முறை கேடாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை ஊர் பொது மக்களிடம் வசூல் செய்து, அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த பணித்தள பொறுப்பாளர் வீரமணி என்பவரை கைது செய்து, பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.