திருவாரூர், ஜூலை 13 - ஒன்றிய பாஜக அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய மூன்று மையங் களில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். முன்னதாக செயற்குழு உறுப்பி னர்கள் எம்.கலைமணி, கே.ஜி.ரகுராமன், பா.கோமதி மற்றும் திரு வாரூர் ஒன்றியச் செயலாளர் என். இடும்பையன் ஆகியோர் கோரிக் கையை வலியுறுத்தி பேசினர். ஒன்றி யச் செயலாளர்கள் டி.ஜெயபால் (கொரடாச்சேரி), கே.எம்.லிங்கம் (நன்னிலம்), எம்.கோபிநாத் (குட வாசல்), நகரச் செயலாளர்கள் திரு வாரூர் எம்.தர்மலிங்கம், பேரளம் சீனி.ராஜேந்திரன், குடவாசல் டி.ஜி.சேகர் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்து கண்டன உரை யாற்றினார். திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் கே.கோபு, முத்துப் பேட்டை ஒன்றியச் செயலாளர் கே. பழனிச்சாமி, நகரச் செயலாளர் சி. செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மன்னார்குடி மன்னார்குடி பந்தலடி அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் தலைமை ஏற்று கண்டன உரை யாற்றினார். சிபிஎம் மன்னார்குடி நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.கந்தசாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், நீடாமங்கலம், கோட்டூர், வலங்கைமான் ஆகிய பகுதியில் இருந்து கட்சியின் ஒன்றியச் செய லாளர்கள் பங்கேற்றனர். மூன்று மையங்களில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங் களை திரும்பப் பெற வலியுறுத்தி யும், மோடி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர்.