districts

img

வாளரைக்குறிச்சியில் பட்டியலின மக்களுக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தருக!

அரியலூர், செப்.24 - அரியலூர் மாவட்டம் வாளரைக்குறிச்சி கிராமத்திற்கு குடிநீர், சாலை, சுடுகாட்டு வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலா ளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்  குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா கண்டன  உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல், ஏ.கந்தசாமி, வட்டச்  செயலாளர் கு.அர்ச்சுனன் ஆகியோர் பேசினர்.  வாளரைக்குறிச்சி கிராமம் பெரிய ஏரியில் இருந்து, பட்டியலின மக்கள் தெரு  வரை சேறும் சகதியுமாக உள்ளது. இச்சா லையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும், மினி டேங்க், ஆழ்துளை கிணறு  அமைத்து குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்க  வேண்டும். மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மோட்டார் அமைத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.  பட்டியலின மக்களின் சுடுகாட்டிற்கு சாலை வசதியும், சுடுகாட்டு கொட்டகை யும் அமைக்க போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மக்க ளின் தெருவில் உள்ள நீர்த்தேக்க தொட்டி யில் மேல்மூடி இல்லாததால், பல்வேறு கழிவு கள் மூலம் குடிநீர் அசுத்தமாவதை தடுக்க புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண் டும். வாளரைக்குறிச்சி கிராமத்திற்கு அதி காலை 5.30 மணி மற்றும் பகல் 12:30  மணிக்கு மட்டுமே பேருந்து வருவதால், பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிரமப்படு கின்றனர். எனவே பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.