districts

img

சிபிஎம் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 12-  

      தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையை அடுத்த கரம்பயம் கடைவீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் விளக்க - நிதியளிப்பு பொதுக்கூட்டம், பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், எம். செல்வம், ஆர்.கலைச்செல்வி, என்.சுரேஷ்  குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். வாசு ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர்கள் ஒரத்த நாடு பி.கோவிந்தராஜ், திருவோணம் வி.பெரியசாமி, மதுக்கூர் எம்.அய்யநாதன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கட்சி நிதி

    பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பில் கட்சி  நிதியாக 4 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை, மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் பட்டுக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் வழங்கினர்.