திருவாரூர், பிப்.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் ஒருவரான பேரளம் ஜெ.நாவலன் படுகொலை செய்யப் பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளி களுக்கு உரிய தண்டனை கிடைக்க வில்லை. இதுகுறித்த வழக்கு நிலுவை யில் உள்ளது. வழக்கை துரிதப்படுத்த கோரி புதிய மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கரன்காரட்-ஐ நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் மனு அளித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: திருவாருர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் பகுதியைச் சேர்ந்த ஜெ.நாவலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக செயல்பட்டார். அப்போது, கள்ளச் சாரா யத்திற்கு எதிராக களப் பணியாற்றிய தால், அப்பகுதியில் இருந்த பன்னீர் என்ற சாதி ஆதிக்க சமூக விரோதி தரப்பினரால், கடந்த 2014 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். மேற்கண்ட படுகொலை சம்பவம் குறித்து பேரளம் காவல்துறையில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேற்கண்ட கொலை செய்யப்பட்ட நாவலன் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் என்பதால், அதனை வன்மமாக கொண்டும், மேற்கண்ட கொலை சம்பவம் நடந்த தால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், பெரும் காலதாமதத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட காவல்துறை யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. தற்போது திருவாரூர் மாவட்டத்திற் குரிய வன்கொடுமை தடுப்பு விசாரணை யின்/குடிமையியல் நீதிமன்றம் (PCR Court), தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளதால் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எவ்வித விசார ணையுமின்றி இருக்கிறது. இதனால் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளும், உரிய சாட்சிகளில் பலரும் உயிரிழந்து விட்டனர். மேலும் சாட்சிகள், இதர வழக்கின் எதிரிகளால் கலைக்கப்படும் அபாயமும் தொடர்ந்து உள்ளது. எனவே மேற்கண்ட வழக்கின், திரு வாரூர் மாவட்டத்திற்கான நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு தகவல் அளித்து, இவ்வழக்கை விரைவாக விசாரிப்பதற்கு, வழக்கை நீதிமன்ற பட்டியலிட காவல்துறையை கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட சம்பவத்திற்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலி யுறுத்தி கடந்த நவ.2 அன்று அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்ட விபரத்தையும் தெரி வித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்டக் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். மனுவை அளிக்கும் போது சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் மற்றும் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.தம்பு சாமி, கே.செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.