districts

img

சிபிஎம் நாகை மாவட்ட 24 ஆவது மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

நாகப்பட்டினம், அக்.27 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு  கீழ்வேளூரில் நடைபெறுகிறது. அதனை யொட்டி கீழ்வேளூரில் மாநாட்டு வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் வரவேற்பு குழு தலைவராக மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினருமான நாகைமாலி தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக என்.எம். அபுபக்கர். பொருளாளராக டி.துரை ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 96 பேர்  கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப் பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்  தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் உரையாற்றினார்.