கரூர், மார்ச் 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியக் குழு சார்பில் அரசியல் விளக்க, நிதியளிப்பு பொதுக்கூட்டம் தோகைமலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு முன்னாள் உறுப்பினர் எ.பெருமாள் வரவேற்றார். கட்சியின் மத்தியக் குழு முன்னாள் உறுப்பினர் அ.சவுந்தரராசன் ரூபாய் ஒரு லட்சத்தை கட்சி வளர்ச்சி நிதியாக பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா.கந்தசாமி, பி.ராஜூ, கே.சக்திவேல் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, தோகைமலை ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.முனியப்பன் நன்றி கூறினார்.