districts

img

பட்டியலின மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுத்துவதா?

கரூர், ஜூன் 11- கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் வட்டம், வயலூர் ஊராட்சிக் குட்பட்ட பாம்பன்பட்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 20 குடும்பங்கள் உள்ளன.  இவர்களுக்கு குடிநீர் இல்லாத தால், கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந் துள்ளனர். அதன் பிறகு கடந்த ஓர்  ஆண்டுக்கு முன்பு, ஊராட்சி நிர்வா கம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அமைத்து போர் வெல் மூலம் தண்ணீர் ஏற்றி கொடுக் கப்படுகிறது.  இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை  ஒரு முடிவுக்கு வந்தது என்று நினைக்கையில், கடந்த ஒரு மாத மாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தொட்டி யில் போதிய அளவு தண்ணீர் வரு வது குறைந்தது. இதனால் கடும்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.  இதற்கு காரணம், இதே ஊரில் வசிக்கும் பிற சமூகத்தின ரின் குடியிருப்பு பகுதியில் உள்ள  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு,  பட்டியலின மக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்  பட்டியலின மக்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கேட்வால்வு அமைத்து, திட்டமிட்டு குடிநீர் பற்றாக்குறையை ஏற்ப டுத்தி சாதியப் பாகுபாட்டுடன் செயல்படும் ஊராட்சி செயலர், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி நிர்வாகத்தை கண்டித்தும், பட்டியலின மக்களின் குடிநீர் பற்றாக்குறையை உடனே போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை  ஒன்றியக் குழு சார்பில் வயலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு முற்று கைப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் பாம்பன்பட்டி கிளைச் செயலாளர் சதீஸ் தலைமை வகித்தார்.  கட்சி யின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, ஒன்றியச்  செயலாளர் இரா.முத்துச்செல் வன், மாவட்டக் குழு உறுப்பினர் சங்கரநாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பேச்சுவார்த்தை இதனைத் தொடர்ந்து இலாலப் பேட்டை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர்  உட்பட அனைவரும் சம்பவ இடத் திற்கு சென்று ஆய்வு மேற்கொண் டார். பின்னர் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச் சந்தர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், காவல் ஆய்வாளர் பா.ஸ்ரீதர், வய லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி கருணாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை  ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச் செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, மாவட்ட  குழு உறுப்பினர் சங்கரநாரா யணன், ஊராட்சி செயலர் சங்கப்பிள்ளை, கிளைச் செயலா ளர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பட்டியலின மக்களுக்கு செல் லும் குடிநீர் குழாயில், கேட்வால்வு அமைத்துள்ளதை அகற்றி, தட்டுப்பாடின்றி தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.